சிவபாதசேகரனும் சிவசரணசேகரனும், சரஸ்வதி சுவாமிநாதன்
₹300.00
சோழ தேசத்தின் மீது காதல் கொண்டோர் அனைவருக்கும் இந்நூல் தேவாமிர்தமாய் இருக்கும். உடையார் வாசித்து பிரமித்துக் கிடந்தோர்கள் அனைவரையும் இந்நூல் மீண்டும் உடையாருக்குள் தள்ளும். ஏனெனில், உடையாரை மீள் வாசிப்புச் செய்வதற்கும் அந்தக் கதைக்குள் ஒளிந்திருக்கும் நிஜத்தை அறிந்து கொள்வதற்கும் இந்நூல் மிகச் சிறந்த கையேடு. சிவ சரணம் உங்களின் சிரசின் மீது பதிவதை உங்களால் உணர முடியும்.
About Author
Description
இந்தப் புத்தகத்தை படிக்கப் படிக்க ஆஹா…. பால குமாரன் ஐயா இந்தப் புத்தகத்தை படித்திருந்தால் எப்படியெல்லாம் சந்தோஷப்பட்டிருப்பார் என்று தோன்றியது. மிக நிச்சயமாக கொண்டாடியிருப்பார்.
ஏனெனில், இந்தப் புத்தகமே உடையார் எனும் பெரும் வரலாற்று நாவல் முழுவதும் விரவியுள்ள தகவல்களை அலசுகின்றது. நாவல் எனும் கலைக்குள் வரலாற்றுச் சம்பவங்கள் எப்படி கோர்க்கப்பட்டிருக்கின்றன என்பதை சுளை சுளையாக எடுத்துக் காண்பிக்கின்றார். வரலாற்று ஆதாரங்களை எப்படி ஒரு எழுத்தாளர் புனைவின் உலகுக்குள் அழகாகச் செருகி நம்மை ரசிக்க வைக்கின்றார் என்று சரஸ்வதி சுவாமிநாதன் சுட்டிக் காட்டுகின்றார்.
சோழ தேசத்தின் மீது காதல் கொண்டோர் அனைவருக்கும் இந்நூல் தேவாமிர்தமாய் இருக்கும். உடையார் வாசித்து பிரமித்துக் கிடந்தோர்கள் அனைவரையும் இந்நூல் மீண்டும் உடையாருக்குள் தள்ளும். ஏனெனில், உடையாரை மீள் வாசிப்புச் செய்வதற்கும் அந்தக் கதைக்குள் ஒளிந்திருக்கும் நிஜத்தை அறிந்து கொள்வதற்கும் இந்நூல் மிகச் சிறந்த கையேடு. சிவ சரணம் உங்களின் சிரசின் மீது பதிவதை உங்களால் உணர முடியும்.
Additional information
| Weight | 0.200 kg |
|---|---|
| Dimensions | 22 × 16 × 2 cm |