Description
சாரு நிவேதிதா சொல்வது போல எதார்த்தவாத கதைகளின் காலம் முடிந்துவிட்டதென்று சொல்கிற எழுத்தாளர்களில் அராத்துவும் ஒருவர். தனது எழுத்தில் உருவாகும் எல்லா கதைகளிலும் ஒரு புது பாணியை கையாள்கிறார். இந்த தொகுதியில் வரும் இரண்டு கதைகளும் அதற்கு விதிவிலக்கல்ல. கதை மட்டுமன்றி நூல் வடிவமைப்பும் அவ்வாறே இருக்கிறது. நூலின் முன் அட்டை பின் அட்டை என்கிற விஷயமே கிடையாது. ஒரு அட்டையில் புஸ்ஸி இன்னொரு அட்டையில் Fool vs Intellectual. ஒரு அட்டை பக்கத்தில் ஒரு கதை ஆரம்பிக்க இன்னொரு அட்டை பக்கத்தில் இன்னொரு கதை ஆரம்பிக்கிறது.