• 25% OffLimited
    புலியூர்க் கேசிகன்
    Kalamegapulavar Thanipadalgal – காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்
    (0 reviews)

    காளமேகப் புலவர்...

    Original price was: ₹200.00.Current price is: ₹150.00.

    காளமேகம் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். வைணவ சமயத்தில் பிறந்த இவர், திருவானைக்கா கோயிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் ஆசை கொண்டார். இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ சமயத்துக்கு மாறினார். இவர் சிலேடை பாடல்களைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் என்று கூறப்படுகின்றது. ஆனாலும் இவர் பல சிறந்த நயம் மிகுந்த பாடல்களையும் பாடியுள்ளார். இவர் பாடிய சிலேடைப் பாடல்களும், நகைச் சுவைப் பாடல்களும் பல உள்ளன. சமயம் சார்ந்த நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். இவர் ஒரு ஆசு கவி ஆவார்.

    ~~~~~~~

    திருவரங்கத்து கோவிலில் பரிசாரகர் (சமையல் செய்பவர்) இருந்தார். திருவானைக்காவில் சிவத் தொண்டு செய்து வந்த மோகனாங்கி என்ற பெண் மீது மாளாக்காதல் கொண்டு இருந்தார். அவள் பொருட்டு ஒரு நாள் அங்குச்சென்று கோவிலின் உட்புற பிராகாரத்தில் அவள் வரவுக்காகக் காத்திருக்கையில் தூக்கம் வர படுத்து உறங்கிப்போனார். அப்பெண்ணும் இவரைத் தேடிக் காணாமல் திரும்பிச்சென்றுவிட்டாள். கோவிலும் திருக்காப்பிடப்பட்டது. அக்கோவிலின் மற்றொரு பக்கத்தில் ஓர் அந்தணன் சரசுவதி தேவியை நோக்கி தவங்கிடந்தான். சரசுவதிதேவி அதற்கிணங்கி அவன் முன்தோன்றித் தமது வாயில் இருந்த தாம்பூலத்தை அவ்வந்தணன் வாயிலுமிழப் போக அதை அவன் வாங்க மறுத்ததால் சினந்து அத்தாம்பூலத்தை வரதன் (காளமேகத்தின் இயற்பெயர்) வாயில் உமிழ்ந்துச் சென்றாள். வரதனும் தன் அன்புக் காதலி தான் அதைத் தந்ததாகக் கருதி அதனை ஏற்றுக்கொண்டான். அது முதல் தேவி அனுக்கிரகத்தால் கல்லாமலே கவி மழை பொழியத்தொடங்கினான். அதனாலேயே வரதன் என்ற பெயர் மாறி காளமேகம் என மாறிற்று.

     

     

  • 11% OffLimited
    Aganaanooru
    (0 reviews)

    அகநானூறு –...

    Original price was: ₹280.00.Current price is: ₹250.00.

    அகநானூறு பாடல்கள் மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுப் பதிப்பிடப்பட்டுள்ளன. முதல் 120 பாடல்களைக் களிற்றியானை நிரை, 121 முதல் 300 வரையிலான 180 பாடல்களை மணிமிடை பவளம், 301 முதல் 400 வரையிலான 100 பாடல்களை நித்திலக் கோவை எனப் பெயரிட்டுள்ளனர்.

    ஆணும் பெண்ணும் காதலால் இணைந்து, தமக்குள் இன்பம் அனுபவித்து வாழ்வது அக வாழ்வாகும். இவ்வாறு, அவர்கள் தமது உள்ளத்திற்குள் நுகரும் உணர்வுகளை சித்தரிப்பவை அகநானூறு பாடல்கள். இந்தப் பாடல்கள் யானைக்களிறு போல் பெருமிதமுடன் நிறைந்தவை. யானைகளின் அணிவகுப்பை ஒத்திருக்கும் வகையில், ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாகே இவை அமைந்துள்ளன.

    இவற்றை எளிதாகப் புரிந்து கொள்ளப் புலியூர்க் கேசிகன் அவர்களின் தெளிவுரை சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.